Monday, October 24, 2011

சைபர் குற்றங்கள்


சமூக விரோதிகள் அட்டகாசம் அதிகமனால் ‘தடியெடுத்தவன் தண்டல்காரன்‘ என்று வருத்தமடைகிறோம். சமூதாயத்தில் கல்வி வளர வளர ஏற்றம் தரும் மாற்றம் ஏற்படுகிறது. ஆயுதங்களுக்கு முக்கியதுவம் கொடுத்த உலகம் இப்போது அறிவு சார்ந்த உலகமாக மாறி வருகிறது. அதனால்தான் ஆன்மீகம் தரும் மனவலிமையும், அறிவும் பெற்ற இந்திய மக்கள் உலகளவில் போற்றப்படுகிறார்கள். கம்ப்யூட்டர் யுகத்தில் நம்மவர் சிறந்து விளங்குகின்றனர். இடத்தை அடைத்துக் கொண்டிருந்த பெரிய கம்ப்யூட்ர்கள் கழிக்கப்பட்டன. இப்போது கையளவில் கணக்கிடும் கருவிகள் வந்து விட்டன. Mobile Phone எனப்படும் கைபேசியிலேயே பேசலாம், பாட்டு கேட்கலாம், படம் பார்க்கலாம், குறுஞ்செய்தி அனுப்பலாம், புகைப்படம் எடுக்கலாம் என்று தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டது. நல்லது நடந்தால் கெடுதலுக்குப் பொறுக்காது ஆதுவும் கூடவே வரும் என்ற வகையில் Cell Phone, கணினி மூலம் சைபர் குற்றங்களும் பெருகிவிட்டன.

Information Technology Act என்று கணினி சம்பந்தப்பட்ட குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க புத்தாயிரம் வருடம் சட்டம் இயற்றப்பட்டது. கணினி மூலம், Cell phone மூலம் தகாத இழிவான மனம் நோகும்படியான Message அனுப்புவது, அச்சுறுத்துவது, பயங்கரவாதத்திற்கு துணைபோவது, ஏமாற்றுவது, ஒருவர் தயாரித்த மென் பொருளை தவறாக பயன் படுத்துவது, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதுபோன்ற பல சமூக விரோத செயல்கள் கணினி மற்றும் Cell Phone மூலம் பரவியுள்ளன. இந்தியாவில் முதல் முறையாப புதிய சட்டப்படி வழக்குப் புனையப்பட்டு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தந்த பெருமை சென்னை மாநகரக் காவல்துறையை சாரும். இது 2004-ம் ஆண்டு சாதிக்கப்பட்டது.

2008-ம் ஆண்டு திருத்தப்பட்ட IT Act -ன் படி கணினி Cell phone உபகரணங்களை சட்ட விரோதமாக பயன்ப்படுத்தினால் பிரிவு 66,67- ன் படி மூன்று வருடம் தண்டனை மற்றும் 5 லட்சம் வரை அபராதம் உண்டு. Cyber Terrorism என்ற குற்றங்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றப்பிரிவு CID பிரிலும் மற்ற நகரங்களிலும் இயங்கின்றன.

Cell phone-யை தவராக உயயோகித்தலோ, அல்லது நமது கை பேசியை பிறர் தவறாக கையாண்டாலோ பொறுப்பு கை பேசி உரிமையாளருடையது தான். செல்போன் தொலைத்தாலோ, திருடப்பட்டாலோ உடனே காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆதலால் நமது பொருட்களை கவனமாக பாதுக்காக்க வேண்டும். சைபர் குற்றங்கள் பற்றி புகார் கொடுப்பதற்கும் தகவல் பெறுவதற்கும் மாநகர சைபர் பிரிவின் அணுகலாம் தொலை பேசி எண்.- 23452350.

///

No comments: