Monday, January 26, 2009

குடியரசுதின நல்வாழ்த்துக்கள்




நாள்.26.01.2009

தேசிய கொடி பட்டொளி வீசிப் பறக்கும் பொழுது பெருமிதத்தோடும், நன்றியறிதலோடும், இந்திய அன்னையை தலை வணங்குவோம்.

குடியரசு நன்னாளில், இந்திய இறையாண்மையைக் கடைபிடித்தல், பொதுச் சொத்தைப் பாதுகாத்தல், வன்முறையைத் தவிர்த்தல், பெண்களின் கண்ணியத்தைக் காப்பாற்றுதல் போன்ற உன்னதமான கடமைகளைப் பின்பற்றி, நாட்டிற்கு பெருமை சேர்ப்போம் என்று உறுதிகொள்வோம்.

மதம், இனம், பொழி போன்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, ஒற்றுமையுடன் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்க பாடுபட வேண்டும், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நன்கு உணர்ந்து, அதனைக் காப்பாற்ற வேண்டும்.

இந்தக் குடியரசு நன்னாளில் “நூற்றுக்கு நூறு” என்ற கல்வித் திட்டம் இல்லவாசிகளின் பயனுக்காகச் செயல்படுத்தப்படுகிறது. இது அடுத்த மூன்று மாதங்கள் முனைந்து எல்லா சிறைத்துறை இல்லங்களிலும் நடைபெறும். நூறு சதவிகிதம் எழுத்தறிவு பெற்றுவிட்டோம் என்ற நிலையை அடைய வேண்டும். அதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறேன்.

அனைத்து சிறைத்துறைக் களப்பணியாளர்களுக்கும், இல்லவாசிகளுக்கும் எனது இதயமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துக்ள்.

No comments: