Wednesday, January 21, 2009

அமரிக்க ஜனாதிபதி பதவியேற்பு



நாள்:21.01.2009

திரு பாரக் ஓபாமா பதவியேற்பு விழாவை பார்த்த கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். மிக அற்புதமான எளிமையான விழா. Obama spoke extempore and what clarity of thought replete with punch lines! எல்லா நாட்டவரையும் கவரும் வகையில் எல்லா மத நல்லிணக்கத்திற்க்கு அடித்தளம் வகுக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்தது. The last speaker in his benediction said that black or blue or white all are equal! He also hoped that under the new President Black will be bright Yellow should mellow, Brown should stick around and white should respect Rights—this was indeed a loaded Message !

இந்த பேச்சு எல்லோரையும் பாதித்திருக்கும்.டாஸ்மாக் கடையே கதி என்று இருக்கும் நம்ம ஊர் பீட்டரின் புதுக்கவிதை எவ்வாறு இருக்கும்? ஒரு கற்பனை......

“ வாம்மா ஓபாமா வாம்மா ஓபாமா!
உலகம் இப்போ மப்புலமா
பேசாம உசுப்புமா
பேசினா உலுக்குமா
நாங்க எல்லாம் ப்ரொவ்னும்மா
உன் பின்னால ஒட்டிகினு வருவோம்மா
வாம்மா ஓபாமா வாம்மா ஓபாமா!”

Tuesday, January 20, 2009

பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்



சென்னையில் மார்கழி மாதம் என்றாலே கர்நாடக இசையும், திருப்பாவை, திருவெம்பாவை, தமிழிசைதான் ஞாபகம் வரும். மார்கழி கடைசியில் வருடா வருடம் நடத்தப்ப்டும் புத்தகக் கண்காட்சியையும் இப்போது சேர்த்து கெள்ள வேண்டும். ஸ்பென்சர்ஸ் எதிரில் உள்ள கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும். தற்போது சில வருடங்களாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. வண்டிகளை பார்க் செய்ய வசதியான இடம்.


யார் சொன்னது படிப்பவர்கள் குறைந்து விட்டார்கள் என்று? சிறுவர், சிறுமியர், பெரியோர்கள், பெண்கள், இளைஞர்கள் என்று பலதரப்பட்ட கூட்டம். ஆன்மீகம், பக்தி இலக்கியம், சங்க இலக்கியம், புதிய வார்ப்புகள், பாடப் புத்தகங்கள் என்று எல்லாவிதமான புத்தகங்களும் கொட்டிக் குவிந்துள்ளன. பதிப்புதுறையில் தொழில் நுட்பத்தின் வரவேற்கத்தக்க ஆதிக்கத்தை காணமுடிந்தது. அவ்வளவு நேர்த்தியான கண்ணுக்கு இதமான பதிப்புகள், புதிய புத்தகங்களை தொட்டு புரட்டி ‘random’ ஆக ஏதோ ஒரு பக்கத்தைப் படிப்பதில் அலாதி இன்பம். ஆனால் அந்த இன்பத்தை இங்கு சுவைக்க முடியாது. அவ்வளவு நெரிசல். சிறையில் உள்ள இல்லவாசிகளுக்கு உபயோகமாக தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய புத்தகங்கள் நிறைய வாங்கினேன். Light from different lamp அப்துல் கலாம் அவர்கள் முன்மொழியும் புத்தகத்தை தேடி அலைந்தேன். கடைசியில் அது புக்பாய்ண்ட் பதிப்பகத்தில் எஞ்சிய இரண்டு பிரதிகளை வாங்கினேன். மூர் மார்கெட்டில் பழைய புத்தகக் கடையில் பல வருடங்களுக்கு முன்னால் அவர்கள் வாங்கியதாகவும் அப்புத்தகம் இப்போதும் தன்னை ‘Inspire’ செய்வதாகவும் அவர் கூறியது என்னை இப்புத்தகம் வாங்கத் தூண்டியது. “புல்லுக்கும் அங்கே புசியுமாம்” என்று சுவைக்கிறேன். புத்தகங்களை சுவைக்க நேரம் ஒதுக்கவேண்டும். One of my most important new year resolution!.
_________