Monday, October 24, 2011

வளர்ச்சியின் வீச்சா வீழ்ச்சியா?


பெண்கள் அதிக அளவில் பொதுத்துறையிலும், தனியார் துறையிலும் பணிகள் செய்வது பொருளாதார முன்னேற்றத்திற்கு மிக அவசியம். பாரதி கனவு கண்ட பெண் சுதந்திரம் அமைந்துவிட்டது என்று பெருமை கொள்ளலாம் என்றால் அதற்கு எதிர் மறையாக பல பிரச்சனைகள் பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

ஒரு இளம்பெண் software நிறவனத்தில் பணிபுரிபவள். அழகும் அறிவும் நிறைந்தவள். கம்பூயூட்டர், கீபோர்டோடு என்று நாள் தவறாது போராடுபவர்கள் உடம்பை தளரவிட நாடுவது கேளிக்கை கிளப்புகள். விடுமுறை நாட்களில் இவை இளைஞர்களின் சரணாலயம். அந்த இடத்தில் ஒரு இளைஞனோடு தொடர்பு எற்படுகிறது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவராயினும் மணம்புரிந்து கொள்கின்றனர். ஆனந்தமாக சில மாதங்கள்தான் கழிந்தன. புகுந்த இடத்தில் சவால்கள், நெருங்கிப் பழகிய பிறகுதான் தெரிய வருகிறது கணவனின் விநோத வழக்கங்கள், கூடா நட்புகள். அகால வேளையில் தீடீரென்று நண்பர்களோடு மறைவது, சூதாடுவது, தீடீர் பணத்திற்கு ஆசைப்பட்டு தெரியாத தொழிலில் முதலீடு செய்தல் போன்றவை சுமுகமான உறவில் சூறாவளியை ஏற்படுத்தின, இவற்றோடு கணவனின் பெற்றோர்களின் சாடல்கள், துன்புறுத்தல்கள், மாமனாரின் சிற்றின்ப சீண்டல்கள், கணவனின் பாராமுகம் என்ற அடுக்கடுக்கான போராட்டங்கள்.

இந்நிலையில் குழந்தைப்பிறக்கிறது ஆயினும் போராட்டங்களுக்கு ஓய்வில்லை. வாய்ச்சண்டையோடு நில்லாமல் கணவன் குழந்தை எதிரிலேயே அடித்துத் துன்புறுத்தத் தூவங்கியதால் துவண்ட அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர்களிடம் செல்கிறாள். அங்கும் அவளுக்குக்கிடைப்பது ‘adjust பண்ணி இரு‘ என்ற அறிவுரைதான். தனிக்குடித்தனம் செல்கிறாள், விவாகரத்து வழக்குத் தொடர்கிறது. குழந்தை தனக்குத்தான் வேண்டும் என்கிறான் கணவன். குழந்தைதான் தனக்கு ஒரே ஆதாரம் என்று போராடுகிறாள். இந்திலையில்தான் அவள் ஒரு உண்மையை வெளியிடுகிறாள். குழந்தை தன்னுடைய கணவனுடையது அல்ல என்ற அசரவைக்கும் உண்மை! ஒருமுறை கணவனோடு ஏற்பட்ட சண்டையில் பிரிந்து அலுவலகத்தில் வேலைபுரியும் சக ஊழியனிடம் தஞ்சம் அடைகிறாள் கூடா உறவு ஏற்படுகிறது. கனவனுக்கும் அரசல் புரசலாக தெரிய வருகிறது. அவளுக்கு மேலும் உளச்சல் ஏற்படுத்தும் வகையில், vicarious pleasure என்று சொல்வார்களே அந்த வகையில் குழந்தை தனக்கு வேண்டும் என்று கணவனும் போராடுகிறான்.

பெற்றோர்ருக்கும் தெரியாத உண்மையை எவ்வாறு வழக்கில் வாதாடி குழந்தையை தன்னுடைமையாக்குவது என்ற போரட்டத்தில் சிக்கியுள்ளாள் அந்தப்பெண். இவ்வாறு பல சோகக் கதைகள்.

இத்ததைய குறைகள் ஏன் விளைகின்றன? தனி மனித சுதந்திரத்தின் எதிரொலி என்று விடுவதா, பெற்றோர்களின் வளர்ப்பு முறையை குறை கூறுவதா. கேளிக்கை விடுதிகளில் அரசு நிர்வாகம் மேற்கெள்ள வேண்டிய கண்காணிப்பை குறைகூறுவதா. இது சமூதாயத்தின் வளர்ச்சியா, வீழ்ச்சியா. சிந்திக் வேண்டும்.

பெண்கள் சார்ந்த குற்றங்களையும் பிரச்சனைப்பற்றி ஆலோசனை கூறவும் பிரத்யேக பெண்கள் காவல் நிலையம் இயங்குகின்றன. சென்னையில் மட்டும் ......... மகளீர் காவல் நிலையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம்------- மகளீர் காவல் நிலையங்கள். சென்னை மாநதர கட்டுப்பாட்டு அறையில் பெண்களின் பிரச்சனையை குறித்து புகார்கள் பெறுவதற்கு 1091 என்ற கட்டணமில்லா தொலைபேசி உள்ளது. தொடர்பு கொள்ளலாம்.

பெண்களை தெய்வங்களாக மதிக்கும் பாரம்பரியம் படைத்தது நம் நாடு. உச்சம், ஞானம், திடம், உயிர்ப்பு என்ற நற்குணங்கள்பெற்ற பெண் இனத்தைப் போற்றுவோம்.

///

திக்குத் தெரியாத வயோதிகம்


நகரங்கள் பெருகி வருகின்றன. வளர்ந்த நகரங்கள் எல்லைத்தாண்டி பெருத்துவிட்டன. புதிய நகரங்கள் உருவாகுகின்றன. முதலில் வேலைத் தேடல் பிறகு துணைத் தேடல். கல்யாணம் ஆன கையோடு குழந்தைகள். அவர்களை வளர்ப்பதில் போராட்டம். அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி வெளிநாட்டிற்கோ, பன்னாட்டு நிறுவனத்திலோ வேலைக்குச் சென்ற பிறகுதான் ஆடிய ஆட்டமெல்லாம் ஒய்ந்து இளைப்பாறும் நேரத்தில் முதுமை வந்து வாட்டுகிறது. நாம் நமது பெற்றோர்களை எவ்வளவு சிரத்தையோடு கவனித்தோம் அவ்வாறு இந்த காலத்து இளைஞர்கள் ஏன் கவனிப்பதில்லை என்ற ஆதங்கம்.


ஜனத்தொகை கணக்கெடுப்பில் வயோதிகர்களின் எண்ணிக்கைகூடியுள்ளது. சுதந்திரம் அடைந்ததிலிருந்து சாதாரண மனிதனின் வாழ்வின் எதிர்பார்ப்பு வயது 58-ல் இருந்து 74-ஆக உயர்ந்துள்ளது, ஒரு வகையில் திருப்தியளித்தாலும் வயது மூதிர்ந்த காலத்தில் பராமரிப்பு ஒரு பிரச்சனையாக வளர்ந்துள்ளது. குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. கல்யாணம் ஆன பெண்கள் உடனே தனிக் குடித்தனம் போக விரும்புகிறார்கள். கலியுகத்தின் நியதி மனைவியை சார்ந்த உறவினர்களுக்கு மதிப்பு. கணவர் சார்ந்தவருக்கு அவமதிப்பு.


ஒரு வயோதிக தம்பதியினரின் மனு கவனத்திற்கு வந்தது. நடுத்தர வகுப்புக் குடும்பம். குழந்தைகள் பெரியவர்களாகி வெளிநாட்டில் அவர்களது குடும்பத்தோடு வசிக்கின்றனர். அவ்வப்போது பெற்றோர்ருக்குப் பணம், வருடாந்திர வருகை ஒரு முறை வெளி நாட்டுப்பயணம் மற்றப்படி தனிமை. தனிமையில் இனிமை காண முடியாதபடி தள்ளாமை. தனிக்குடிததனம் நடத்துவது ஆரம்ப காலத்தில் சுவாரசியமாகவும், புது அனுபவமாகவும் இருக்கலாம். ஆனால் வயது காலத்தில் தினசரி பொருட்களை வாங்குவது சமைப்பது மற்ற வீட்டு வேலைகள் செய்வது பெரும்பாடாகி விடுகிறது. அதனால் வரக்கூடிய மனக்கசப்பு, கருத்துவேறுபாடு தர்க்கம், விதண்டாவாதம் என்று வயது காலத்திலும் தாம்பத்திய வாழ்க்கையில் விரிசல். பிள்ளைகளும் அவரவர் பணிகளில் மூழ்கிவிடுகின்றனர் பெற்றோர்களை கவனிப்பதற்கு ஏது நேரம்? முதியோர் இல்லங்கள் பல உள்ளன. ஆனால் அதிக பணம் செலவு செய்வதற்கு மனமில்லை. அங்கு போவதற்கும் தயக்கம். நாலு பேர் என்ன செல்வார்களோ என்ற பயம். அவர்களை குறை சொல்ல முடியாது. காலத்தின் கட்டாயம் அவ்வாறு அறிந்து விடுகிறது. சென்னை கோடம்பாக்கத்தில் கூட்டுக் குடும்பமாக மகன், பேரக்குழந்தைகள், கொள்ளுத் தாத்தா, சகிதம் சதோஷமாக வாழ்கின்றனர் என்ற செய்தி படிக்கிறோம். எவ்வளவு குடும்பங்களுக்கு அந்த பாக்கியம் கிட்டுகிறது. பல குடும்பங்களில் பெற்றோர்களின் கொஞ்சநஞ்ச சொத்தையும் பிரித்துப் பெற்றுக் கொள்ள விழையும் காலம் இது.


முதியவர்களின் பிரச்சனை வளர்ந்துக்கொண்டே இருப்பதால்தான் Dignity foundation போன்ற பல தனியார் தொண்டு நிறுவனங்கள் பல நற்பணிகள் செய்து வருகின்றன. மத்திய அரசும் The Maintenance and Welfare of Parents and Senior Citizens Act 2007’ என்ற சட்டம் நிறை வேற்றியுள்ளது. தமிழகத்தில் 2009-ம் ஆண்டிலிருந்த நடைமுறையில் உள்ளது. இதன்படி பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளுக்கு மூன்று மாதம் வரை தண்டனையும் வரையறுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் கட்டாணமில்லா தொலைபேசி எண்.1256 உள்ளது. அதில் தொடர்பு கொண்டு பாதுகாப்பு கோரலாம் சங்கடங்களுக்கு தீர்வு காணலாம்.


அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்பதை செயல் வடிவில் காட்டுவோம். பெரியவர்களைப் போற்றுபோம்.

----