Wednesday, March 17, 2010

உலக நுகர்வோர் தினம்



ஜனநாயக அமைப்பில் மக்களுக்கு உரிமைகள் பல இருக்கின்றன ஆனால் அதைப்பற்றிய புரிதல் இல்லை.

2) ஒரு நாட்டின் பொருளாதாரம் மக்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கிறது. தொன்று தொட்டு வணிகமும் வியாபாரமும் சமுதாய வளர்ச்சியோடு இணைந்துள்ள்து. ஒரு நாடு செழிப்பாக இயங்க வேண்டும் என்றால் நேர்மையான வணிகம் இன்றியமையாதது. “No Nation is Destroyed by Trade”

3) வணிகம் முறையாக இயங்கவில்லை என்றால் வியாபாரமும் விவசாயமும் படுத்துவிடும்.

தமிழரின் பண்டைகால வணிகமுறை
“ கொள்வதும் மிகை கொளாது
கொடுப்பதும் குறை கொடாது “
எவ்வளவு நிதர்சன உண்மை.

4) “Customer is important” வாடிக்கையாளர்களே முதன்மையானவர் என்றார் மகாத்மா காந்தி அவர்கள். நுகர்வோரை புறக்கணித்தாலோ, ஏமாற்றினாலோ வியாபாரம் முடிவில் படுத்துவிடும். பண்டம் மாற்று முறையில் வணிகம் செய்த காலத்தில் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உழைப்பிற்கு ஏற்றவாறு பண்டம் கொடுக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இது மாறி பணத்தின் ஆதிக்கம் தலை தூக்கிவிட்டது. நாணயம் வியாபாரத்தின் நாணயத்தை நசுக்கி விட்டது.

5) இத்தகைய சூழலில் நுகர்வோரின் உரிமைகளைப் பற்றி எடுத்துச் சொல்லவும் உரிமைகளை நிலை நாட்டவும் எடுக்கப்படும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது.

6) ‘ஏமாற்றாதே ஏமாறாதே’ என்பதில் அர்த்தம் புதைந்திருக்கிறது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் தழைப்பார்கள். அதிக வட்டி என்று முதலீட்டார்களை ஈர்த்து முடி0வல் அவர்கள் ஏமாற்றப்பட்டு பல வழக்குகள் பதிவாயின. நாட்டில் இத்தைகைய மோசடி அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம். சுமார் 10 லட்சம் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை இழந்துள்ளார்கள். இழந்த பணம் சுமார் ரூபாய் 3000 கோடி. இவ்வளவு நடந்த பிறகும் ஏமாறுபவர்கள் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

7) “எந்த படியால் அளக்கிறோமோ, அந்த படியால் அளந்து கொடுக்கப்படும்” என்கிறது பைபிள். எவ்வளவு தெளிவான கட்டளை! உழைப்பில்லாமல் சம்பாதிக்க முடியாது. நுகர்வோரின் நம்பிக்கையை சம்பாதித்தால்தான் வியாபாரம் நிலைத்து நிற்கும். சம்பாத்தியமும் நிலைக்கும். அதற்கு நுகர்வோர் விழிப்புணர்வு இருந்தால், உழைப்பிற்கு மதிப்பு கொடுத்தால் இத்தகைய மோசடிகள் நிகழாது.
நாணய வியாபாரம் நாணயமாக நிகழும். நுகர்வோர் கொடுப்பது பணம் மட்டும் அல்ல. அது அவர்களின் உழைப்பு அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

நுகர்வோர் பாதுகாப்பே அதற்கு வழிவகுக்கும்.

No comments: