Saturday, July 25, 2009

உள்ளொளி


சிறையிலுள்ள இல்லவாசிகளுக்காக உள்ளொளி என்ற இதழ் ஒன்றை தொடங்கியிருந்தோம்.
அந்த இதழில் எழுதிய தலையங்கத்தை இங்கு பிரசுரிக்கிறேன்.

தலையங்கம்

மனிதன் ஒரு நாணல். இயற்கையில் உள்ளவற்றில் மிகவும் பலகீனமானவன் அவனே. ஆனால், அவன் ஒரு சிந்திக்கும் நாணல். சிந்தனையில்தான் மனிதனின் பெருமை பொதிந்துள்ளது. மனிதனின் மீட்சிக்கு நாம் நமது கற்பனை, சிந்தனை தவிர வேறொன்றையும் சார்ந்திருக்க முடியாது’ - பாஸ்கல்.
பாஸ்கலின் உலகப் புகழ்பெற்ற இந்த மேற்கோள், நமது வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புள்ளது. சிந்தனைக்கு நாம் அறிஞர்களையும் படைப்பாளிகளையும் புத்தகங்களையும் தான் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. பொரும்பாலானோருக்கு வாசிப்பு என்பது எளிதில் அல்லது மந்த கதியில் நிகழும்; முயற்சி தேவைப்படாத ஒரு பழக்கமாக இருந்துவருகிறது. வாசகனின் முயற்சியை வேண்டும், அதன் மூலம் வாசகனின் அகவிஸ்தரிப்பைச் சாத்தியமாக்கும், வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் தத்துவத்திற்கும் சமூகத்திற்குமான உறவை எடுத்துகாட்டும் படைப்புகள் நமக்கு அவசியம் என்பதால் தமிழின் சிறந்த பக்கங்கள் இனி உள்ளொளி அலங்கரிக்கும்.

வாசிப்பு என்பது இயந்திரகதியில் நிகழும் செயல் அல்ல; மாறாக மன ஒழுங்கை வலியுறுத்தும், படைப்புச் செயலில் பங்கும் கொள்ளும் ஒரு செயல்பாடு. எண்ணங்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.

இதழைப் படிக்க கீழ் காணும் சுட்டியை தொடரவும்..

No comments: